Showing posts with label மனம். Show all posts
Showing posts with label மனம். Show all posts

Monday, March 30, 2015

அழைத்து செல்ல மாட்டாயா...

இரயில் நிலயம் வந்ததும்
கதவோரம் காலியான இடத்தில்
சென்று நின்று கொண்டான்
நீல நிற சட்டை காரன்.

வண்டி கிளம்பியதும்
எதிர் திசையில் வீசிய காற்றை
ரசிப்பவனாய் கண் மூடி சிரித்து கொள்கிறான்,
சற்றே  சிலிர்த்து  கொள்கிறான்.

அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டியவனை போல
ஆயுத்த படுத்தி கொண்டிருக்கும்போது
சட்டென்று திரும்பி பார்க்கிறான்
இரயிலில் கூவி கூவி புத்தகம் விற்பரவின்
குரலை கேட்டு.

'1212 கேள்விகள், 1212 பதில்கள்,
இந்தியாவின் முதல் ஆளுநர் யார்?
இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்?
இந்தியாவில் எத்தனை ஆறுகள் உள்ளன?
பாம்பில் எத்தனை வகை உள்ளது?
குரங்கில் எத்தனை வகை உள்ளது?
மனித உடம்பில் எவ்வளவு இரத்தம் உள்ளது?
இப்படி 1212 கேள்விகள், 1212 பதில்கள்
வெறும் 20 ரூபாய்க்கு'

இவனை போலவே அங்கிருந்த எவருக்கும்
1212 பதில்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றோ ,
அந்த மனிதனின் ஒரு வேலை சாப்பாட்டிற்கு
வழி செய்ய வேண்டும் என்ற எண்ணமோ எழுந்ததற்கு
எந்த வித அறிகுறியும் இல்லை.

யாரும் ஏறெடுத்து கூட பார்க்க மருதத்தை
சிறிதும் பொருட் படுத்தாதவறாய்
அடுத்த பெட்டிக்கு இறங்கி ஓடுகிறார்
1212 பதில்களை ஒருவருக்கேனும்
ஊட்டி விட வேண்டும் என்ற வைராக்யாத்தோடு.

நீல நிற சட்டை காரன் இறங்கி சென்றதை கவனிக்காது
அந்த புத்தகம் விற்பவரை பற்றி எண்ணி கொடிருந்தேன்.

இரயில் கிளம்பியது.
சட்டென்று முந்தியடித்து கொண்டு
ஓடும்  இரயிலை விட்டு இறங்கி
அந்த நீல சட்டை காரணிடம் ஓடி ஒட்டி கொண்டேன்,
இறங்கும் பொது உன் 'மனசையும்' சேர்த்து
அழைத்து செல்ல மாட்டாயா என்று கடிந்து கொண்டே.

                  -மகா 



 

Saturday, January 31, 2015

நீண்ட நெடும் ஆசைகள்!!!


என் பிம்பங்கள் அனைத்தையும்
சற்று நேரம் ஓரமாக அமர வைத்து விட்டு, 
என் அகத்தை உற்று நோக்க ஆசை. 


பார்த்த பின்
தனை உடம்பில் இருந்து கழற்றி
பழுது பார்த்து , சீர்திருத்தி, துடைத்து
திரும்பி மாட்டி கொள்ள ஆசை.


என்னுடன் எப்பொழுதும்
துணைக்கு வரும் எனது நிழலை
சற்று தோளில் சுமந்துச் செல்ல ஆசை.


நான் உதிர்க்கும் சிரிப்பை எல்லாம்
பொறுக்கி வைத்துக் கொண்டு
என் அழுகையில் உபயோகித்துக் கொள்ள ஆசை.


என்னிடம் இருந்து வந்த வார்த்தைகள்
ஒவ்வொன்றும் திரும்பி நின்று
ஒரு முறை என்னிடம்
அனுமதி கேட்டுச் செல்ல ஆசை.


நான் எழுதிய எழுத்துக்கள் அனைத்தும்
ஒன்று சேர்ந்து நீண்ட நெடும் கண்ணாடியாய்
விரிந்து நிற்க,
அதன் பிரதிபலிப்பில்
எனது ஒரு பாதியையேனும் கண்டு விட ஆசை. 
-மகா.

Wednesday, October 22, 2014

காதல் போலும்...


காதலுக்கு முன்:
அறிவு:"கண்ணை கட்டி காட்டில் விடும் கண்ணாம்பூச்சி ஆட்டம் இது.."
மனம்:"கண் இல்லாமல் ஆட கூடிய சொர்க லோக தோட்டம் இது..."

"வில்லன் அவன் பேச்சை கேட்டு வீண் வம்பில் மாட்டாதே". 
"வெள்ளை குணம் கொண்ட என்னை வில்லன் என எண்ணாதே". 

"வெட்டவெளி பார்க்க வைக்கும், வெட்கத்தோடு நடக்க வைக்கும்". 
"வெட்கம் ஒன்றும் துக்கம் இல்லை, அதை கட்டி போட தேவை இல்லை". 

"கிறுக்கு புடிக்க வைத்து உன்னை இழுத்து சேற்றில் தள்ளி விடும்".
"பட்டாம்பூச்சி போல் பறக்கும் சுகம் உனக்கு வந்து விடும்".

"கத்தி போன்ற கண்கள் உன்னை கட்டிப்போட்டு கொன்று விடும்".
"கட்டி போட்ட கண்களை காதல் கட்டவிழ்த்து வென்று விடும்".

"இயல்பான விஷயங்களுக்கு மெருகேற்றி உன்னை அடிமையாக்கி விடும்".
"அந்த அந்தி, வானம், நிலா, மழை போன்றவைகள் இயல்பானவை அல்ல... அவற்றிற்கு அடிமையாவது தான் இயல்பான விஷயம்".

"நீ வாழ போகும் வாழ்க்கை, நீ அடைய ஆசை படும் சந்தோஷம், உன் வாழ்வில் எட்ட துடிக்கும் உயரம், இவை அனைத்தையும் பெற போராட வேண்டி இருக்கும்... உன் பிறப்பு போல் இறப்பு இனிமையாக இருக்கும் என்பது நிச்சயம் இல்லை".
"போராட பிறந்தவன் தான் மனிதன்... போராடி அடைவது தான் வாழ்க்கை... அது தான் உண்மையாண சந்தோஷம்".

மனம் வெற்றி பெற்றதுமனதின் ஆட்சி நடைபெற்றது...


காதலுக்கு பின்...

அறிவு: "அய்யோ!!! கண்டவையெல்லாம் அழகு என்று எண்ணி ரசித்த ரசிகன் எங்கே?
காரணங்கள் இல்லாமல் சிறிது மகிழ்ந்த சிறுவனை இப்பொழுது காரணம் இருந்தாலும் சிரிக்க முடியாதபடி செய்தது யார்? ஏய் மனமே... இது உன் வேலையா… ?  
ஆனந்த கண்ணீரால் ஆனந்தம் அடைந்து கொண்டிருந்த இவனை கண்ணீர் வற்றி போகும் அளவிற்கு அழ வைத்தது யார்? மனமே, நீ தான் காரணமா?
என்ன கொடுமை... இவனுக்கு இப்படி ஒரு  சோதனையா...  சசிட்டு குருவி போல் சிறகை அடித்து பறந்தானே...
பட்டாம்பூச்சி போல வண்ணமாய் திகழ்ந்தானே....
முயல் போல ஓடி திரிந்தானே...
இவனுக்கு என்ன ஆயிற்று?
மனமே, காதலுக்கு முன் கம்பீரமாக கருத்து யுத்தம் செய்தாயே, இப்பொழுது ஏன் மௌனம் சாதிக்கிறாய்... பதில் சொல்
அன்றே சொன்னேனே உன் பேச்சை கேட்க வேண்டாம் என்று... அய்யோ...."  


எப்படி பேசும்... உயிரோடு இருந்தால் தானே... மனதிற்கு  காதலின் மீது காதல் இருந்தது... இவனுடைய காதல் என்று இறந்ததோ அன்றே தன்னை கிழித்து கொண்டு உயிரை விட்டு விட்டது மனம்...

மனதின் காதல் வாழ்க என்று வாழ்த்தி விட்டு, ஆட்சி ஏற்றது அறிவு... மனதின் நினைவுகளோடு...
அட... அறிவிற்கும் மனம் மீது காதல் போலும்...