Showing posts with label அம்மா. Show all posts
Showing posts with label அம்மா. Show all posts

Saturday, October 25, 2014

பெண்!!!



வெண்ணிலவு சென்று தினம் வெள்ளை நிலா சோறு ஊட்டினாள் அன்னை,

கண்ணுறங்கும் வேலை வரை கதை கூறி சீராட்டினாள் அக்கா,

கல்வி தனை கண்ணாக போற்ற வேண்டும் என்று உணர வைத்தாள் ஆசிரியை,

வாழ்வில் உணர்வுகளுக்கு விளக்கம் கொடுத்தாள் தோழி,

அவற்றிர்க்கு உயிர் கொடுத்தாள் காதலி,

மொழியில் கூட தாய் மொழியே சிறந்தது,

ஆறுகள் கூட பெண்ணின் பெயர் கொண்டே சேவை புரிகிறது...

பெண்ணே, உனக்கு இதனை பரிணாமமா?

பெண் என்ற ஒருத்தி இல்லாமல் போய் இருந்தால்

மனிதர்கள் மனிதர்களாக இருந்திருக்க முடியுமோ?


-மகா 

Wednesday, October 22, 2014

என்ன தவம் செய்தேனோ!!!

அம்மா!!!!!!
    என்ன தவம் செய்தேனோ,
    உன் மடியில் நான் உறங்க,
    என் உறக்கத்திற்கு நீ கண் விழிக்க,
    உன் கையால் நிலாச்சோறு உண்ண,
    எனக்கு ஆடை அனிவித்து நீ அழகு பார்க்க,
    என் நா உன்னை அம்மாவென்று அழைக்க…..



அப்பா!!!!
    என்ன தவம் செய்தேனோ,
    உங்கள் கரம் பிடித்து நடை பழக,
    உங்கள் உபந்நியாசங்களை கேட்டு நடக்க,
    உங்கள் வியர்வையை சோறாக்கி அம்மா எனக்கு ஊட்ட,

    என் தேவைகளை நான் கேட்காமலே   நீங்கள்  புரிந்து  கொள்ள…..

-மகா