Showing posts with label அறிவு. Show all posts
Showing posts with label அறிவு. Show all posts

Tuesday, October 28, 2014

காலை...


நிலவு உறங்க போகும் நேரம்,
சேவல் கூவி என் உறக்கத்தை கெடுத்ததால்
இது கொக்கரக்கோ காலையோ?

தோட்டத்து பூ செடியில் மொட்டு ஒன்று 
கண்பரிக்கும் அழகோடு மலர்ந்தது கண்டு களிப்புற்றதால்
இது மலர்விடு காலையோ?

கண்பரித்த மழலை மொட்டு மேல் 
பொன் பொறித்த விதமாய் இருக்கும்
பனித்துளி உணர்த்துகிறது,
இது பனி விழும் காலை...

சட்டென்று கேட்ட குட்டி நாயின் கூச்சல் 
என் கவனத்தை ஈர்த்தது...
அது வெறும் கூச்சல் அல்ல,
விளையாட்டு கூச்சல்,
தாயை பார்த்து குட்டி நாய் போடும் செல்ல கூச்சல்,
தாய்,குட்டியை தடவி தரும் போது போடும் ஆசுவாச கூச்சல்,
தாயின் அருகில்,அன்பில்,அரவணைப்பில் 
மூழ்கி போன நிறைவு கூச்சல்
அந்த தாய் சேய் உறவு, 
பார்க்க பார்க்க சிலிர்த்தது

திடீரென்று தாய் தன் குட்டியின் கழுத்தை கவ்வி கொண்டு
குப்பை தொட்டி ஒன்றன் அருகில் பத்திர படுத்தியது,
மனித நடமாட்டம் அதிகமானதாலோ என்னவோ...

இதென்ன !!!
நாய்க்கும் ஆறாம் அறிவு வளர்ந்ததோ என வியந்தேன்

வியந்த அதே நேரம் தாய் பாசத்திற்கு அறிவு பொருட்டு இல்லை என்பதை உணர்ந்தேன்.... 

இந்த அழகிய காட்சி என் மனதை தொட்டு சொன்னது , 
இது அன்பின் வாசம் நிறைந்த காலை... 

காலையின் அழகை கவித்துவத்தோடு ரசித்த பின்,
என்னால் மறுபடியும் காதல் வந்தது தேநீர்க்கும் செய்தி தாளுக்கும்...

 பார்வையை செய்தி தாள் பக்கம் திருப்பினேன்...
அதில் “பச்சிளம் குழந்தை குப்பை தொட்டியில் அனாதையாக இறந்து கிடந்தது
என்ற செய்தியை வாசித்ததும் தோன்றியது ஒன்று தான்...

இது ஆறு அறிவு மனிதன் அழிந்து கொண்டிருக்கும், தன்னை அழித்து கொண்டிருக்கும் உலகத்தை பற்றிய கவலை மிகுந்த காலை  என...

ஆறு அறிவு மனிதன்!!! இருந்தென்ன பயன்... ??


Wednesday, October 22, 2014

காதல் போலும்...


காதலுக்கு முன்:
அறிவு:"கண்ணை கட்டி காட்டில் விடும் கண்ணாம்பூச்சி ஆட்டம் இது.."
மனம்:"கண் இல்லாமல் ஆட கூடிய சொர்க லோக தோட்டம் இது..."

"வில்லன் அவன் பேச்சை கேட்டு வீண் வம்பில் மாட்டாதே". 
"வெள்ளை குணம் கொண்ட என்னை வில்லன் என எண்ணாதே". 

"வெட்டவெளி பார்க்க வைக்கும், வெட்கத்தோடு நடக்க வைக்கும்". 
"வெட்கம் ஒன்றும் துக்கம் இல்லை, அதை கட்டி போட தேவை இல்லை". 

"கிறுக்கு புடிக்க வைத்து உன்னை இழுத்து சேற்றில் தள்ளி விடும்".
"பட்டாம்பூச்சி போல் பறக்கும் சுகம் உனக்கு வந்து விடும்".

"கத்தி போன்ற கண்கள் உன்னை கட்டிப்போட்டு கொன்று விடும்".
"கட்டி போட்ட கண்களை காதல் கட்டவிழ்த்து வென்று விடும்".

"இயல்பான விஷயங்களுக்கு மெருகேற்றி உன்னை அடிமையாக்கி விடும்".
"அந்த அந்தி, வானம், நிலா, மழை போன்றவைகள் இயல்பானவை அல்ல... அவற்றிற்கு அடிமையாவது தான் இயல்பான விஷயம்".

"நீ வாழ போகும் வாழ்க்கை, நீ அடைய ஆசை படும் சந்தோஷம், உன் வாழ்வில் எட்ட துடிக்கும் உயரம், இவை அனைத்தையும் பெற போராட வேண்டி இருக்கும்... உன் பிறப்பு போல் இறப்பு இனிமையாக இருக்கும் என்பது நிச்சயம் இல்லை".
"போராட பிறந்தவன் தான் மனிதன்... போராடி அடைவது தான் வாழ்க்கை... அது தான் உண்மையாண சந்தோஷம்".

மனம் வெற்றி பெற்றதுமனதின் ஆட்சி நடைபெற்றது...


காதலுக்கு பின்...

அறிவு: "அய்யோ!!! கண்டவையெல்லாம் அழகு என்று எண்ணி ரசித்த ரசிகன் எங்கே?
காரணங்கள் இல்லாமல் சிறிது மகிழ்ந்த சிறுவனை இப்பொழுது காரணம் இருந்தாலும் சிரிக்க முடியாதபடி செய்தது யார்? ஏய் மனமே... இது உன் வேலையா… ?  
ஆனந்த கண்ணீரால் ஆனந்தம் அடைந்து கொண்டிருந்த இவனை கண்ணீர் வற்றி போகும் அளவிற்கு அழ வைத்தது யார்? மனமே, நீ தான் காரணமா?
என்ன கொடுமை... இவனுக்கு இப்படி ஒரு  சோதனையா...  சசிட்டு குருவி போல் சிறகை அடித்து பறந்தானே...
பட்டாம்பூச்சி போல வண்ணமாய் திகழ்ந்தானே....
முயல் போல ஓடி திரிந்தானே...
இவனுக்கு என்ன ஆயிற்று?
மனமே, காதலுக்கு முன் கம்பீரமாக கருத்து யுத்தம் செய்தாயே, இப்பொழுது ஏன் மௌனம் சாதிக்கிறாய்... பதில் சொல்
அன்றே சொன்னேனே உன் பேச்சை கேட்க வேண்டாம் என்று... அய்யோ...."  


எப்படி பேசும்... உயிரோடு இருந்தால் தானே... மனதிற்கு  காதலின் மீது காதல் இருந்தது... இவனுடைய காதல் என்று இறந்ததோ அன்றே தன்னை கிழித்து கொண்டு உயிரை விட்டு விட்டது மனம்...

மனதின் காதல் வாழ்க என்று வாழ்த்தி விட்டு, ஆட்சி ஏற்றது அறிவு... மனதின் நினைவுகளோடு...
அட... அறிவிற்கும் மனம் மீது காதல் போலும்...